Monday, April 12, 2010

யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்

www.ponnusamypalani.blogspot.com/2010/04/blog-post
" தண்டகாரண்யம்: இந்திய தேசியம் பேசினால் செருப்பால் அடிப்பேண்டா"
என்ற பதிவு கண்டு நான் அனுப்பிய பின்னூட்டம்:

பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் ஒரு சேர ஒழிந்துவிடும் என்பதால் தண்டகாரண்யத்தில் கனிம சுரங்கங்கள் கூடாது என்பது புரிகிறது. ஒரு கோணத்தில் நியாயமும் கூட.
ஆனால், இந்த பிரச்னையில் இன்னொரு கோணம் உள்ளது. (வெளி நாட்டு சுரண்டல் பற்றி நான் கூறவில்லை).
இரும்பு, தங்கம், வெள்ளி, தாமிரம், கந்தகம், போன்ற கனிமங்கள் நிலத்திற்கு அடியில் இருந்து, சுரங்கம் அமைத்து, எடுத்து, பல்வேறு முறைகளில் பயன் படுத்துவது பல நூறு, அல்ல ஆயிரம் ஆண்டுகளாக வருகின்ற நடைமுறையே. இது போல் நடந்த கால கட்டங்களில் அந்த பழங்குடியினர் ஒன்று குடி பெயர்ந்து வேறு காடுகளில் குடியேறி இருக்க வேண்டும்; அல்லது, பொது சமுதாயத்தில் கலந்திருக்க வேண்டும். (நம் முன்னோர் அவ்வாறே வந்தவர்களாக இருக்கலாம்.)
சரியோ தவறோ, உலகம் முழுதும் "நவீன வாழ்வு " முறை வந்து விட்டது. கனிமங்கள் இருக்கும் போது, அதை பயன் படுத்தவே எந்த ஒரு அரசும் எத்தனிக்கும். (இதில் பன்னாட்டு நிறுவனகள் இல்லாவிடினும், இது நடந்தே தீரும்.)
ஒவ்வொரு நாட்டிலும் வேறு வேறு கனிம வளங்கள் உள்ளன: சிலியில் கந்தகம், மைய கிழக்கு நாடுகளில் எண்ணெய், தென் ஆப்ரிக்காவில் தங்கம், வைரம், என உள்ளது நாம் அறிந்ததே; அங்கும் வனப் பகுதியில் சிறிது காலத்திற்கு முன்போ, அல்லது நீண்ட காலத்திற்கு முன்போ, வனமும், பழங்குடிகளும் இருந்திருக்க வேண்டும். ( எனக்கு உலக சரித்திரம் பெரிய அளவுக்கு தெரியாது; இது தவறு என்றால் சரியான நிலை கூறவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்).
தண்டகாரண்யத்தில் வசிக்காத "பிற" "இந்தியர்கள்" கனிம வளங்களை பயன் படுத்தாமல் தொழில் வளர்ச்சி பாதிப்பு, பிற நாடுகளிலுருந்து இறக்குமதி, அந்நிய செலாவணி என்று ரீல் விடுவார்கள்.
இதனால், என் சிற்றறிவுக்கு எட்டியவரை, பழங்குடியினருக்கு மிகவும் பாதிப்பு இல்லாமல், சுரங்கம் அமைத்தல்; அல்லது, அவர்களை குடி பெயர்த்து, சரியான வாழ்வு முறைக்கு வழி வகுத்தல் என்று சரியாக திட்டம் தீட்டி, அருந்ததி ராய், மேதா பாடகர் முதலிய பொது நல விரும்பிகளின் அங்கீகாரத்துடன் பணி மேற்கொள்வது சரியாக இருக்கலாம்.

3 comments:

  1. நல்ல கருத்து.

    தமிழ்மணத்தில் இணைத்தால் இன்னும் அதிகம் பேரை சென்றடையும்.

    ReplyDelete
  2. யாதும் ஊரே யாவரும் கேளிர் :
    I am the citizen of the world.
    Who cares about that! If all follow that there can not be any war.People would lead a happy life.
    We are fighting for the religion but not living what religion says.
    No religion says bad things and wands to have peaceful good life.

    அருமையான கட்டுரை

    ReplyDelete
  3. நன்றி, அக்பர், நீடுரலி

    ReplyDelete