Monday, September 6, 2010

தமிழ்நாட்டில் பொது விநியோக முறை

யாதும்தமிழ் நாட்டைப் பற்றி பாசிடிவ் செய்தி வருவது குறைந்து விட்டது. ஆகவே எப்போது வந்தாலும் மகிழ்ச்சியே.

times of India செய்தி தாளில் பொருளாதார பிரச்னைகளை பல வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதும் சுவாமிநாதன் ஐயர் கட்டுரையில் ஒரு வாக்கியத்தில் தமிழ்நாட்டைப் பற்றி இப்படி வருகிறது: "பொது விநியோக முறை" தமிழ்நாட்டில் மிக அழகாக வேலை செய்கிறது. அதே போல் அனைத்து மாநிலங்களிலும் இருந்து விட்டால் நன்றாக இருக்கும் என சிலர் சொல்கின்றனர். இது எப்படி இருக்கிறது என்றால் "எல்லா கிரிக்கெட்டர்களும் டெண்டுல்கரைப் போல் இருந்தால் இந்தியா எப்போதும் உலக சாம்பியன்" எனபது போலே.
இந்த கட்டுரையில் வேறு ஒரு இடத்திலும் தமிழ்நாட்டைப்பற்றி குறிப்பு இல்லை. எனக்கென்னவோ இதை பதிவு செய்யவேண்டும் என தோன்றியது.
६ septembar 2010
ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்

No comments:

Post a Comment